ஆப்நகரம்

tn govt schools ஆசிரியர் தேர்வு நிறுத்தி வைப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 30 Jun 2022, 11:25 am
அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13 ஆயிரத்து 331 இடங்களை நிரப்புவதற்காக பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
Samayam Tamil tn govt school teachers


அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வை முடித்தவர்கள், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளித்து பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மைக் குழுவினர் தகுதியானவர்களை தொகுப்பூதியம் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தகுதியற்றவர்கள் இந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்தது.
ஓபிஎஸ் வைத்த செக்: எந்த முடிவெடுத்தாலும் வெற்றி இவருக்கு தான்!
ஆசிரியர் தகுதித் தேர்வை முடித்து சான்றிதழ் சரிபார்ப்பில் இருப்பவர்கள் பலர் இருக்க தகுதியில்லாதவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் இன்றுகூட பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள் மொட்டை அடித்து அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Va.pugazhendi அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை: முதல்வரை நாடிய புகழேந்தி
தொடர்ந்து எதிர்ப்பு அதிகமாக வந்ததால் பள்ளிக் கல்வித்துறை தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் வரை தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி