ஆப்நகரம்

காவிரி இல்லேன்னா பரவால்ல; கடல்நீர் இருக்கே: சுப்ரமணியன் சுவாமி சர்ச்சை

தமிழக அரசு, காவிரி நீருக்காகப் போராடுவதை கைவிட்டு, கடல்நீரை குடிநீராக மாற்ற முன்வரவேண்டும் என, பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

TNN 7 Sep 2016, 11:33 am
தமிழக அரசு, காவிரி நீருக்காகப் போராடுவதை கைவிட்டு, கடல்நீரை குடிநீராக மாற்ற முன்வரவேண்டும் என, பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
Samayam Tamil stop whining about cauvery river subramanian swamy tells tamil nadu
காவிரி இல்லேன்னா பரவால்ல; கடல்நீர் இருக்கே: சுப்ரமணியன் சுவாமி சர்ச்சை


இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை கடல்நீரை குடிநீராக்கித் தீர்த்துக் கொள்ள வேண்டும். இந்த தொழில்நுட்பம் பல நாடுகளில் உள்ளது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சுய அரசியல் லாபத்திற்காக தமிழகத்தில் போராட்டத்தை தூண்டுகிறார். வேண்டுமென்றால் இஸ்ரேலில் இருந்து கடல்நீரை குடிநீராக்கும் தொழில்நுட்பத்தை ஜெயலலிதாவிற்கு நான் வாங்கித் தருகிறேன் என்றும் சுப்ரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

Tamil Nadu should stop whining about Cauvery River and instead desalinate sea water for drinking purpose as well as for irrigation— Subramanian Swamy (@Swamy39) September 7, 2016

காவிரி நீருக்காக, தமிழக மக்களும், அரசும் பல தரப்பில் சீரிய போராட்டங்களை முன்னெடுத்து வரும் சூழலில், சுப்ரமணியன் சுவாமி இவ்வாறு பேசியுள்ளது திடீர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி