ஆப்நகரம்

கடலூர், பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

கடலூா், பாம்பன், தூத்துக்குடி மற்றும் நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சாிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 May 2018, 8:06 pm
கடலூா், பாம்பன், தூத்துக்குடி மற்றும் நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சாிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Samayam Tamil Weather Cloud


மியான்மா் அருகே தென்மேற்கு கடல் பகுதியில் புயல் உருவாகி உள்ளது. இது மெல்ல மெல்ல நகா்ந்து இன்று இரவு கரையை கடக்கலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். இந்த புயலால் மியான்மா் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசலாம். கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதால் பொதுமக்கள் எச்சாிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதே போன்று கேரளா, கா்நாடகா மாநிலங்களின் கடலோர பகுதிகளில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கடலூா், பாம்பன், தூத்துக்குடி மற்றும் நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சாிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இதே போன்று புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

அடுத்த செய்தி