சென்னையில் தெரு நாயை உலக்கையால் ஒருவர் தாக்கியதை தொடர்ந்து அந்த நாயின் வலது கண் பார்வை பறிபோயுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் சென்னை விருகம்பாக்கம் இந்திரா நகர் 3-வது தெருவைச் சேர்ந்த எழுமலை என்பவர் தான் வளர்த்து வரும் நாயை அந்த தெரு வழியாக கூட்டி வந்துள்ளார்.அப்போது அதே தெருவில் திரியும் சிட்டி என்ற ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் நாய் ஒன்று,எழுமலையின் நாயை கடிக்க முற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த எழுமலை,அந்த தெருநாயை உலக்கையை வைத்து தாக்கியுள்ளார்.இந்த தாக்குதலால் சிட்டியின் வலது கண் கடுமையாக காயமடைந்துள்ளது.மேலும் அதன் கால் ஒன்றில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சிட்டியின் வலது கண் கடுமையாக காயப்பட்டுள்ளதால்,அதனை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.இதனால் அந்த நாயின் வலது கண் பார்வை பறிபோயுள்ளது.சிட்டியை தாக்கிய எழுமலை மீது புளூ கிராஸ் அமைப்பின் மேலாளர் டான் வில்லியம்ஸ் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதனை பெற்றுக் கொண்ட காவல்துறையினர்,எழுமலை மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
English Summary:
A five-year-old male stray dog lost its right eye and suffered a leg fracture when a man beat it with a pestle at Virugambakkam in Chennai a few days ago.
சில நாட்களுக்கு முன்னர் சென்னை விருகம்பாக்கம் இந்திரா நகர் 3-வது தெருவைச் சேர்ந்த எழுமலை என்பவர் தான் வளர்த்து வரும் நாயை அந்த தெரு வழியாக கூட்டி வந்துள்ளார்.அப்போது அதே தெருவில் திரியும் சிட்டி என்ற ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் நாய் ஒன்று,எழுமலையின் நாயை கடிக்க முற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த எழுமலை,அந்த தெருநாயை உலக்கையை வைத்து தாக்கியுள்ளார்.இந்த தாக்குதலால் சிட்டியின் வலது கண் கடுமையாக காயமடைந்துள்ளது.மேலும் அதன் கால் ஒன்றில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சிட்டியின் வலது கண் கடுமையாக காயப்பட்டுள்ளதால்,அதனை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.இதனால் அந்த நாயின் வலது கண் பார்வை பறிபோயுள்ளது.சிட்டியை தாக்கிய எழுமலை மீது புளூ கிராஸ் அமைப்பின் மேலாளர் டான் வில்லியம்ஸ் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதனை பெற்றுக் கொண்ட காவல்துறையினர்,எழுமலை மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
English Summary:
A five-year-old male stray dog lost its right eye and suffered a leg fracture when a man beat it with a pestle at Virugambakkam in Chennai a few days ago.