விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஒருதலையாக காதல் செய்த இளைஞரால் தீ வைக்கப்பட்ட மாணவி நவீனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விழுப்புரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் செந்தில். இவர் நவீனா என்ற பள்ளி மாணவியை ஒருதலையாக காதலித்துள்ளார். இவருடைய காதலை அந்த மாணவி ஏற்காததால் கடந்த 30ம் தேதியன்று அந்த மாணவியின் வீட்டிற்கு சென்ற செந்தில் பொட்ரோல் ஊற்றி தன் மேல் தீ வைத்துக் கொண்டு அந்த மாணவியை கட்டிபிடித்தார்.
இதில் சம்பவத்தில் பாதிக்கபட்ட இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி செந்தில் பலியானார். இதனையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி , மேல் சிகிச்சைகாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மாணவி நவீனா சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை அதிகாலை 2மணியளவில் உயிரிழந்தார்.
விழுப்புரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் செந்தில். இவர் நவீனா என்ற பள்ளி மாணவியை ஒருதலையாக காதலித்துள்ளார். இவருடைய காதலை அந்த மாணவி ஏற்காததால் கடந்த 30ம் தேதியன்று அந்த மாணவியின் வீட்டிற்கு சென்ற செந்தில் பொட்ரோல் ஊற்றி தன் மேல் தீ வைத்துக் கொண்டு அந்த மாணவியை கட்டிபிடித்தார்.
இதில் சம்பவத்தில் பாதிக்கபட்ட இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி செந்தில் பலியானார். இதனையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி , மேல் சிகிச்சைகாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மாணவி நவீனா சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை அதிகாலை 2மணியளவில் உயிரிழந்தார்.