ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு காளைகளாக தமுக்கம் மைதானத்தில் போராட்டம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெயர் போன மதுரை தமுக்கம் மைதானத்தில், அனிதாவின் மரணத்திற்காக நீதி கேட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

TNN 7 Sep 2017, 3:42 pm
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெயர் போன மதுரை தமுக்கம் மைதானத்தில், அனிதாவின் மரணத்திற்காக நீதி கேட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil student protest for anitha on thamukkam ground at madurai
ஜல்லிக்கட்டு காளைகளாக தமுக்கம் மைதானத்தில் போராட்டம்



அலங்காநல்லூர் தமுக்கம் மைதானம் ஜல்லிக்கட்டு போராட்டத்தால் உலகளவில் பெயர் பெற்றது. தற்போது இந்த மைதானம் மீண்டும் போராட்டக்களமாக மாறியுள்ளது.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போலவே, தமுக்கம் மைதானத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து, மைதானத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயற்சி செய்தனர்.


இதனால் மாணவர் ஒருவருக்கு, கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அமைதியான முறையில் போரட்டதில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் தங்களது பலத்தை பிரயோகப்படுத்தியது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Student protest for anitha on thamukkam ground at madurai

அடுத்த செய்தி