ஆப்நகரம்

குண்டர் சட்டத்தில் கைதான மாணவி வளர்மதி ஜாமினில் விடுவிப்பு!

குண்டர் சட்டம் ரத்தானதை அடுத்து, மாணவி வளர்மதி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

TNN 7 Sep 2017, 4:35 pm
சென்னை: குண்டர் சட்டம் ரத்தானதை அடுத்து, மாணவி வளர்மதி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
Samayam Tamil student valarmathi releases after goondas act cancelled
குண்டர் சட்டத்தில் கைதான மாணவி வளர்மதி ஜாமினில் விடுவிப்பு!


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்து வரும் மாணவி வளர்மதி. இவர் கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட போராட்டங்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்.

இதையடுத்து கதிராமங்கலம் போராட்டத்தைத் தூண்டும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததாக கூறி, ஜூலை 13ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் மீதான பல்வேறு வழக்குகளையும் தொடர்புபடுத்தி ஜூலை 17ஆம் தேதி, வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து, வளர்மதியின் தந்தை மாதையன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் கோவை சிறையில் இருந்து மாணவி வளர்மதி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

Student Valarmathi releases after Goondas act cancelled.

அடுத்த செய்தி