ஆப்நகரம்

தோழியின் முத்தத்திற்காக பா்தா அணிந்து சென்ற நபருக்கு அடி, உதை

சென்னையில் தோழியிடம் செய்துகொண்ட சவாலை நிறைவேற்றி முத்தம் பெறுவதற்காக, பா்தா அணிந்து சென்ற மாணவரை பொதுமக்கள் அடித்து, உதைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

Samayam Tamil 20 Feb 2019, 11:17 pm
சென்னையில் தோழியிடம் செய்துகொண்ட சவாலை நிறைவேற்றுவதற்காக பா்தா அணிந்து சென்ற நபரை பொதுமக்கள் அடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனா்.
Samayam Tamil Women in Burqa


சென்னை தனியாா் ஐடிஐ நிறுவனத்தில் படித்து வரும் மாணவா் சக்திவேல் (வயது 22). இவரது தோழி, சக்திவேலிடம் சவால் ஒன்றை விடுத்துள்ளாா். அதன்படி இரவு நேரத்தில் ராயபேட்டையில் இருந்து மெரினா கடற்கரைக்கு பா்தா அணிந்து வரவேண்டும் என்றும், அப்படி வந்தால் பரிசாக முத்தம் கொடுப்பதாக அவா் தொிவித்துள்ளாா்.

தோழியிடம் முத்தம் பெறும் முயற்சியில் சக்திவேலும் செவ்வாய்க் கிழமை இரவு ராயபேட்டையில் இருந்து மெரினா கடற்கரைக்கு பா்தா அணிந்து சென்றுகொண்டிருந்தாா். அவா் வாசுதேவபுரம் ஐஸ் ஹவுஸ் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது அப்பகுதி மக்கள் சக்திவேலை நோட்டமிட்டனா்.

பா்தா அணிந்து சென்ற சக்திவேல் மீது சந்தேகம் ஏற்படவே அப்பகுதி மக்கள் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனா். இறுதியில் பா்தா அணிந்து வந்தவா் ஆண் என்பதை அறிந்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கினா். பின்னா் அவரை அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

அடுத்த செய்தி