ஆப்நகரம்

இன்று மாலை முதல் பொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 15 Jul 2020, 5:22 pm
தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 500க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கடந்த 2018ஆம் ஆண்டுக்கான கலந்தாய்வை ஆன்லைன் மூலம் அண்ணா பல்கலை., நடத்திய நிலையில், 2019ஆம் ஆண்டுகளுக்கான பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை, அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பதிலாகத் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்த துவங்கியுள்ளது.

இதனிடையே, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. எனினும், எனினும், கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கல்வி நிறுவனங்கள் திறப்பு தள்ளி கொண்டே போகிறது. இதுவரை கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை.

மின்கட்டண உயர்வு: நாளை திமுக சார்பில் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் கூட்டம்

அதேசமயம், B.E., B.Tech., படிப்புகளுக்கான கலந்தாய்வை செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும், 2, 3, 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஆகஸ்ட் 16 முதல் தொடங்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் உள்ள பொறியியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ. உத்தரவிட்டது.

அதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதிக்குள் முதல் சுற்று கலந்தாய்வையும், செப்டம்பர் மாதம் 10ஆம் தேதிக்குள் இரண்டாம் சுற்று கலந்தாய்வையும் முடிக்க வேண்டும்.நிரம்பாத இடங்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும்.செப்டம்பர் 16ஆம் தேதி புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படவேண்டும் என்ற முடிவுகள் கடந்த மாதம் 29ஆம் தேதி நடைபெற்ற உயர்கல்வித் துறையின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன. எனினும், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தள்ளிக் கொண்டே போனது.

பொறியியல் கலந்தாய்வு தேதி


இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பத்தை இன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி வரை ஆன்லைனில் மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். www.tneaonline.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி