ஆப்நகரம்

நாளை பள்ளி செல்லும் மாணவர்கள் இதை காண்பித்து இலவசமாக செல்லலாம்!

தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் சீருடை, பழைய பாஸ் இருந்தால் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 18 Jan 2021, 9:46 pm
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் மூடப்பட்ட பள்ளிகளை நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால், கடும் எதிர்ப்புகள் எழுந்ததால், பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்திய தமிழக அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைத்தது.
Samayam Tamil எம்.ஆர்.விஜயபாஸ்கர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்


இதனிடையே, அடுத்த கட்ட பொது முடக்கத்தை தளர்வுகளுடன் தமிழக அரசு அறிவித்ததையடுத்து, மீண்டும் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு கருத்து கேட்டது. அதில், பெரும்பாலானவர்கள் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில், 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை வருகிற 19ஆம் தேதி (நாளை) முதல் திறந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

பள்ளிகள் நாளை திறப்பு: செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை!

இந்த நிலையில், தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் சீருடை, பழைய பாஸ் இருந்தால் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி