ஆப்நகரம்

குரங்குகளுக்கு உயிர்கொடுத்த மாணவர்கள்!

மின் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட குரங்கும் அதன் குட்டியும் தகுந்த சிகிச்சையளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளன.

Samayam Tamil 22 Sep 2019, 3:52 pm
உளுந்தூர்பேட்டை ஒன்றியம், ஏ.குமாரமங்கலம் அருகே குரங்கு ஒன்று அதன் குட்டியுடன் மின்கம்பத்தில் நின்றுள்ளது. அப்போது மின் அதிர்ச்சி ஏற்பட குரங்கும் அதன் குட்டியும் அங்கிருந்து கீழே விழுந்துள்ளன. இதனால் அவற்றிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த அப்பகுதி பள்ளி மாணவர்கள் சிலர் இரு குரங்குகளையும் தூக்கிக்கொண்டு உளுந்தூர்பேட்டை கால்நடை மருந்தகத்தில் சேர்த்துள்ளனர்.
Samayam Tamil Untitled collage (8)


கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் தமிழ்மணி மற்றும் கால்நடை மருந்தக ஆய்வுக்குச் சென்ற திருக்கோவிலூர் கோட்ட உதவி இயக்குநர் டாக்டர் மு.தமிழரசு அகியோர் உரிய முறையில் குரங்குக்கும் அதன் குட்டிக்கும் சிகிச்சையளித்தனர். இதனால் தாயும் சேயும் காப்பற்றப்பட்டனர்.

உரிய நேரத்தில் குரங்குகளை மருந்தகத்துக்கு கொண்டுவந்த மாணவர்களையும், கால்நடை மருத்துவர்களையும் அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.

அடுத்த செய்தி