ஆப்நகரம்

டிக் டாக் செயலியால் மாணவர்கள் இடைநீக்கம்

திருப்பத்தூர் அரசு பள்ளியில் ஆசிரியரை கேலி செய்து டிக் டாக் வீடியோ வெளியீடு 12ம் வகுப்பு மாணவர்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட கல்வி அதிகாரி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

Samayam Tamil 24 Jan 2019, 10:48 am
வேலூர்மாவட்டம், திருப்பத்தூர் லண்டன் மிஷன் ரோட்டில் அரசு நிதியுதவி பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பள்ளியில் +2 படிக்கும் மாணவர்கள் சிலர் "டிக் டாக் " எனப்படும் சமூகவலைதளத்தில் வணிகவியல் ஆசிரியர் ஏளனம் செய்தும் மேஜை நாற்காலிகளை இழுத்தும் தரைகுறையான முறையில் நடந்து கொண்டு கேலி கிண்டல் செய்து அந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார்கள்.
Samayam Tamil tiktok


இந்த வீடியோ பொதுமக்கள் மற்றும் பெற்றோர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டார் அதன்பேரில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவர்கள் ஒழுங்கற்ற முறையில் ஆசிரியரை நடத்தியது தெரியவந்தது .

அதைத் தொடர்ந்து +2 மாணவர்கள் ஆறு பேர் இடைநீக்கம் செய்தது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் உத்தரவிட்டார். மேலும் அவர்களை தேர்வு நேரத்தில்போது மட்டும் தேர்வு எழுதி அனுமதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதற்கான உத்தரவு பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பள்ளியை சேர்ந்த தற்போது இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர் ஒருவர் பள்ளியின் தலைமை ஆசிரியரை கத்தியால் குத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி