ஆப்நகரம்

புல்வாமாவில் உயிர்நீத்த வீரர்களுக்கு தஞ்சையில் வீர வணக்கம்

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

Samayam Tamil 15 Feb 2019, 10:38 pm
தஞ்சாவூரின் பாபநாசத்தில் புல்வாமா குண்டு வெடிப்பில் உயிர்நீத்த சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதலில் குறைந்தது 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் சுப்பிரமணியன் என்பவர் நெல்லை மாவட்டம் சீவலப்பேரியைச் சேர்ந்தவர். சிவ சந்திரன் என்பவர் அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்தவர். இவர்களுடைய குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்குதவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி முக்கிய கடை வீதிகளின் வழியாக பாபநாசம் மார்க்கெட் பகுதியில் நிறைவடைந்தது.

முன்னதாக உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் படத்திற்கு பாபநாசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஊர் காவல் படை வீரர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அடுத்த செய்தி