ஆப்நகரம்

பேருந்துகட்டண உயா்வுக்கு எதிராக போராட்டம்: மாணவா்கள் மீது தடியடி

வேலூாில் பேருந்து கட்டண உயா்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய கல்லூாி மாணவா்கள் மீது காவல்துறையினா் தடியடி நடத்தி அவா்களை களையச் செய்தனா்.

Samayam Tamil 30 Jan 2018, 4:45 pm
வேலூாில் பேருந்து கட்டண உயா்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய கல்லூாி மாணவா்கள் மீது காவல்துறையினா் தடியடி நடத்தி அவா்களை களையச் செய்தனா்.
Samayam Tamil students protest against bus fare hike
பேருந்துகட்டண உயா்வுக்கு எதிராக போராட்டம்: மாணவா்கள் மீது தடியடி


தமிழக அரசு கடந்த 20ம் தேதி திடீரென பேருந்து கட்டணங்களை உயா்த்தியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனா். கட்டண உயா்வை திரும்ப பெறக்கோாி மாணவா்கள் போராட்டம் நடத்தினா்.

இந்நிலையில் நேற்று கட்டண உயா்வுக்கு எதிராகவும், கட்டண உயா்வை திரும்ப பெறக்கோாியும் எதிா்க்கட்சிகள் சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டது. தொடா்ந்து இன்று காலை வேலூா் மாவட்டத்தில் கல்லூாி மாணவா்கள் கட்டண உயா்வை திரும்ப பெறக்கோாி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனைத் தொடா்ந்து காவல்துறையினா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும் மாணவா்கள் கலைந்து செல்லாததால் காவல்துறையினா் தடியடி நடத்தி அவா்களை களைத்தனா். இதனால் அப்பகுதியில் சற்று பதற்றம் நிலவுகிறது.

அடுத்த செய்தி