ஆப்நகரம்

ரயிலில் தொங்கி சாகசம் செய்த இளைஞர்களுக்கு வலைவீச்சு

மாணவர்கள் சிலர் சபர்பன் ரயிலின் கதவில் தொங்கி செய்த அபாயகரமான சாகச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரயில்வே காவலர்கள் அந்த இளைஞர்களை கண்டுபிடித்து கைது செய்ய ஆயத்தமாகி உள்ளனர். சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

Samayam Tamil 22 Feb 2019, 11:00 am
மாணவர்கள் சிலர் சபர்பன் ரயிலின் கதவில் தொங்கி செய்த அபாயகரமான சாகச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரயில்வே காவலர்கள் அந்த இளைஞர்களை கண்டுபிடித்து கைது செய்ய ஆயத்தமாகி உள்ளனர். சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
Samayam Tamil railway train


சமீப காலங்களில் கல்லூரி மாணவர்கள் அனுமதியின்றி ரயில்வே தண்டவாளத்தை கடப்பத்து, ரயிலில் தொங்கி சாகஸம் புரிவது போன்ற அபாயகரமான விஷயங்களை செய்து வருகின்றனர். இது பலருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது சென்னை கல்லூரி மாணவர்கள் சிலர் சபர்பன் ரயிலின் கதவில் தொங்கி செய்த அபாயகரமான சாகச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரயில்வே காவலர்கள் அந்த இளைஞர்களை கண்டுபிடித்து கைது செய்ய ஆயத்தமாகி உள்ளனர். சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

இதுபோன்று விதிகளை மீறுவோருக்கு கடும் தண்டனை விதிக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். தொடர்ந்து இவ்வாறு செய்யும் மாணவர்களுக்கு ரயில்வே பாஸ் ரத்து செய்யப்படும் என ரயில்வே காவலர்கள் தகவல் அளித்துள்ளனர். ரயில்வே அதிகாரிகள் எவ்வளவு எச்சரிக்கை விடுத்து ஆங்காங்கே கிக்-குக்காக இதுபோன்ற செயல்களை மாணவர்கள் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி