ஆப்நகரம்

தேர்வுக்கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் - ஸ்டாலின்

தேர்வுக்கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்வு எழுதுவதில் விலக்களித்து மதிப்பெண் வழங்கிட வேண்டும் என ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை

Samayam Tamil 29 Aug 2020, 2:59 pm
தமிழகத்தில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை தவிர பிற பருவத்தேர்வுகளுக்கு விலக்கு அளித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ரெகுலர் மற்றும் அரியர் தேர்வுகளை எழுத கட்டணம் செலுத்தியுள்ள மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பெண்களும் வழங்கப்படவுள்ளன. இந்நிலையில், கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்வுகளை ரத்து செய்து மதிப்பெண் வழங்க திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil file pic


ஸ்டாலின் அறிக்கை, "இறுதிப் பருவத் தேர்வு தவிர மற்ற பருவப் பாடங்களின் தேர்வுக் கட்டணம் செலுத்திக் காத்திருக்கும் மாணாக்கர்களுக்குத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும்” என்று 26.8.2020 அன்று முதலமைச்சர் திரு. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருந்தாலும், அது ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்திற்கும் பலனளிப்பதாக இல்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது.

"பருவத் தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தியவர்களை மட்டுமே, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவும், முதலமைச்சரும் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பதும் - ஊரடங்கால் பருவத் தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் நலன் குறித்து ஆலோசனை நடத்தவில்லை என்பதும் கண்டனத்திற்குரியவை.

"மாணவர்களிடமிருந்து வசூலித்த தேர்வுக் கட்டணத்தை உடனே பல்கலைக்கழகத்திற்குச் செலுத்த வேண்டும்” என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்ட போது கூட பல கல்லூரிகள், “மாணவர்கள் பெரும்பாலானோர் எங்களுக்குத் தேர்வுக் கட்டணம் செலுத்தவில்லை. பிறகு எப்படி நாங்கள் பல்கலைக்கழகத்திற்குச் செலுத்த முடியும்?” என்று கேள்வி எழுப்பின. கல்லூரிகள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் கூட வழக்குகள் தொடரப்பட்டன.

Ramadoss: அரசுப்பள்ளிகளில் நன்கொடையா? அரசு தலையிட்டு தீர்க்க வேண்டும்

"ஆனால் இவை பற்றி எல்லாம் கவலைப்படாமல், அதுபற்றி ஆலோசிக்காமல், தமிழக அரசு நியமித்த உயர்மட்டக்குழு, “கட்டணம் செலுத்திய மாணாக்கர்கள் குறித்து” மட்டும் பரிந்துரை செய்ததும், அதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முதலமைச்சர் முடிவு எடுத்துள்ளார். பேரிடர் நெருக்கடியில் “தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாமல் போன மாணவர்களை முதலமைச்சர் பழனிசாமி கை கழுவியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது'' என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அடுத்த செய்தி