2018 ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்ட சத்தீஸ்கர் பிலாஸ்பூர் எய்மஸ் மருத்துவமனையை நாளை (அக்.,5) பிரதமர் திறந்து வைக்கிறார். அதே வருடம் அடிக்கல் நடப்பட்ட மதுரை எய்ம்ஸ் திறக்கப்படவில்லை என்று மதுரை எம்பி. சு.வேங்கடேசன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சுட்டிக்காட்டியுள்ளார். மதுரை எய்ம்ஸ் பணிகள் 95 சதவிகிதம் முடிந்துவிட்டதாக இரண்டு நாட்கள் பயணமாக தமிழம் வந்த பாஜக தேசிய தலைவர் ஜே. பி நட்டா தெரிவித்ததற்கு விமர்சனங்கள் எழுந்தன.
கடந்த 2015 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ்-க்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு வந்து அதற்கான அடிக்கல் நாட்டினார். தற்போதுவரை மருத்துவமனை கட்டப்படவுள்ள இடத்தில் சாலை, சுவரை தவிர வேறெந்த பணிகளும் நடக்கவில்லை. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் பணிகள் 95 சதவிகிதம் முடிந்துவிட்டதாக ஜே. பி நட்டா கூறியது அனைவரையும் வியக்க வைத்தது.
இதற்கு ஏற்கனேவே மதுரை எம்பி சு. வெங்கடேசன் எதிர்வினையாற்றி இருந்தார். இந்நிலையில் நாளைய தினம் பிலாஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்பணிக்கவுள்ளார். இதனை சு. வெங்கடேசன் ஒப்பிட்டு ட்வீட் போட்டுள்ளார்.
ராஜராஜ சோழன் இந்து மன்னனா? தமிழினம் சும்மா இருக்காது; கருணாஸ் எச்சரிக்கை
அதில், சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள்தான் 95 % முடிந்துள்ளது. அதைத்தான்அக் 5 ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணிக்கவுள்ளார். ஆனால் அதே அதே 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் இன்னும் பொட்டல்காடாகவே இருக்கிறது. அந்த பொட்டல்காட்டைக் காட்டி 95 சதவிகிதம் என்றால் என்ன? என்று பாடம் வேறு நடத்தப்படுகிறது. ஜே. பி நட்டா சொன்ன 95 சதவிகிதப்பணி அவர் எம்எல்ஏ -வாக இருந்த பிலாஸ்பூரில் தான் நடந்துள்ளது என்பதை அண்ணாமலை அறிந்துகொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ்-க்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு வந்து அதற்கான அடிக்கல் நாட்டினார். தற்போதுவரை மருத்துவமனை கட்டப்படவுள்ள இடத்தில் சாலை, சுவரை தவிர வேறெந்த பணிகளும் நடக்கவில்லை. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் பணிகள் 95 சதவிகிதம் முடிந்துவிட்டதாக ஜே. பி நட்டா கூறியது அனைவரையும் வியக்க வைத்தது.
இதற்கு ஏற்கனேவே மதுரை எம்பி சு. வெங்கடேசன் எதிர்வினையாற்றி இருந்தார். இந்நிலையில் நாளைய தினம் பிலாஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்பணிக்கவுள்ளார். இதனை சு. வெங்கடேசன் ஒப்பிட்டு ட்வீட் போட்டுள்ளார்.
ராஜராஜ சோழன் இந்து மன்னனா? தமிழினம் சும்மா இருக்காது; கருணாஸ் எச்சரிக்கை
அதில், சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள்தான் 95 % முடிந்துள்ளது. அதைத்தான்அக் 5 ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணிக்கவுள்ளார். ஆனால் அதே அதே 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் இன்னும் பொட்டல்காடாகவே இருக்கிறது. அந்த பொட்டல்காட்டைக் காட்டி 95 சதவிகிதம் என்றால் என்ன? என்று பாடம் வேறு நடத்தப்படுகிறது. ஜே. பி நட்டா சொன்ன 95 சதவிகிதப்பணி அவர் எம்எல்ஏ -வாக இருந்த பிலாஸ்பூரில் தான் நடந்துள்ளது என்பதை அண்ணாமலை அறிந்துகொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.