ஆப்நகரம்

நெல்லையில் விபத்து குறித்து ஆய்வு செய்த பெண் எஸ்.ஐ. வேன் மோதி பலி

நெல்லை அருகே இன்று அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்து குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்த பெண் எஸ்.ஐ. மீது வேன் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்தாா்.

TOI Contributor 7 Sep 2017, 8:32 pm
நெல்லை அருகே இன்று அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்து குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்த பெண் எஸ்.ஐ. மீது வேன் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்தாா்.
Samayam Tamil sub inspector died in accident
நெல்லையில் விபத்து குறித்து ஆய்வு செய்த பெண் எஸ்.ஐ. வேன் மோதி பலி


நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே அதிகாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த சிலிண்டா் லாரி மீது தண்ணீர் லாரி மோதியது. இதில் கியாஸ் சிலிண்டர் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தாழையூத்து காவல்துறை பெண் சப்-இன்ஸ்பெக்டர் அகிலா தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

மீட்பு வாகனம் மூலம் கவிழ்ந்து கிடந்த லாாியை மீட்கும் பணி நடந்து கொண்டு இருந்தது. மீட்பு நடவடிக்கைகளை சாலை ஓரமாக நின்று சப்-இன்ஸ்பெக்டர் அகிலா மேற்பாா்வையிட்டாா். அப்போது அந்த வழியாக பழங்கள் ஏற்றிக் கொண்டு மதுரையில் இருந்து ஒரு வேன் வேகமாக வந்துள்ளது.

யாரும் எதிா்பாராத விதத்தில் அந்த வேன் மீட்பு பணியை பார்த்துக் கொண்டிருந்த அகிலா மற்றும் அங்கு நின்று கொண்டு இருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சப்-பென்ஸ்பெக்டர் அகிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 3 பேர் காயம் அடைந்தனர்.

தகவல் கிடைத்ததும் தாழையூத்து காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் மாதவனை கைது செய்தனர். பின்னர் உயிாிழந்த சப்-இன்ஸ்பெக்டர் அகிலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவா்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அடுத்த செய்தி