ஆப்நகரம்

கஞ்சா பதுக்கிய விவகாரம்; சென்னை காவலர் பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவு!

காவல் ஆய்வாளர் வீட்டில் கஞ்சாவை பதுக்கிய விவகாரத்தில், உதவி ஆய்வாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

Samayam Tamil 16 Apr 2019, 9:34 pm
தமிழக காவல்துறை விசாரணை செய்வதில் மிகவும் சிறப்பு பெற்றவர்கள். உலகப் புகழ்பெற்ற ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாகப் புகழப்பட்டு வருகின்றனர். ஆனால் ஒருசிலர் செய்யும் தவறான செயல்களால், தமிழகக் காவல்துறைக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடுகிறது.
Samayam Tamil Police Dismissed


அந்தவகையில் தமிழக காவலர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை மெரினா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சுந்தர வடிவேலு பணியாற்றி வந்தார்.

இவர் வாகனச் சோதனை ஒன்றில் சிக்கிய 30 கிலோ கஞ்சாவை எடுத்துச் சென்றுள்ளார். அதனை ஆய்வாளர் வீட்டில் பதுக்கி வைத்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், சுந்தர வடிவேலுவை பணி நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அடுத்த செய்தி