ஆப்நகரம்

விடைபெற்றார் சுபஸ்ரீ.! மெழுகுவர்த்தி ஏந்தி நண்பர்கள் கண்ணீர் அஞ்சலி.. (வீடியோ உள்ளே)

சென்னை அருகே சாலையில் சென்ற போது அதிமுக பேனர் விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த, சுபஸ்ரீயின் உடல் தகனம் இன்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடந்து முடிந்தது.

Samayam Tamil 13 Sep 2019, 9:04 pm
கனடா செல்லும் கனவோடு பள்ளிக்கரணையில் தேர்வு எழுதிவிட்டு டூவீலரில் திரும்பிய சுபஸ்ரீ, சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் மேலே விழுந்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்தார். இந்நிலையில் பின்புறம் வேகமாக வந்துகொண்டிருந்த தண்ணிலாரி அவர் மீது ஏறியதால் படுகாயம் அடைந்த சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Samayam Tamil 111





பிரேதப் பரிசோதனை முடிந்து அவரது உடல் குரோம்பேட்டையில் இருக்கும் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. பிரேதத்தைப் பார்த்த பெற்றோரின் கதறல் காண்போரையும் துக்கத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ சுபஸ்ரீயின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடந்து முடிந்தது.


நீதிமன்றம், ஊடகம் என இந்த விபத்தைக் குறித்துப் பரபரப்பாக விவாதித்துக் கொண்டு வரும் நிலையில் ஊரடங்கி காட்சியளிக்கிறது சுபஸ்ரீயின் வீடு. தாய் தகப்பனிற்கு ஒரே பெண்ணான இவரது இழப்பை அவரது குடும்பம் எப்படி தாங்கிக்கொள்ளப்போகிறது என்பதுதான் கசப்பான உண்மை. பெண்களைப் பெற்ற ஒவ்வொரு அப்பாவின் மனதிலும் சுபஸ்ரீயின் முகம் பதிந்து விட்டதென்பதே நிதர்சனம்.

அடுத்த செய்தி