ஆப்நகரம்

Ganesha Idols: விநாயகருக்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி: தமிழக அரசு

விநாயகர் சிலை வைக்க ஒற்ளைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 7 Sep 2018, 10:37 am
சென்னை: விநாயகர் சிலை வைக்க ஒற்ளைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil IMG-20170719-WA0026_21409


விநாயகர் சதுர்த்தி வரும் 13ம் தேதி நாடு முழுக்கக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைப்பதற்கும் அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் 24 நிபந்தனைகளை தமிழக அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் புதன்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இந்த வழக்கில் விநாயகர் சிலைகளுக்கு அனுமதி வழங்க ஒற்றைச் சாளர முறையை பின்பற்றுவது பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கு பதிலளித்த அரசு, விநாயகர் சிலைகள் வைக்க ஒற்றை சாளர முறை பின்பற்றப்படும் என்றும் விண்ணப்பித்த 3 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்றும் கூறியது. தேவையான மின் இணைப்பை வீடுகள் அல்லது கடைகளிலிருந்து பெறுவதற்கும் அனுமதி வழங்குதவாகத் தெரிவித்தது.

இதனையடுத்து, விநாயகர் சிலை தொடர்பாக அரசு விதித்த நிபந்தனைகளை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரிய பொதுநல மனுக்களை பரிசீலித்த நீதிபதிகள் அதனை ஏற்க முடியாது எனத் தெரிவித்து, அவற்றைத் தள்ளுபடி செய்தனர்.

அடுத்த செய்தி