ஆப்நகரம்

உன்னால எத்தனை பிரச்சனை; ராஜினாமா பண்ணுப்பா பழனிச்சாமி: சுப்பிரமணியன் சுவாமி!

முதலமைச்சர் பழனிச்சாமி பதவி விலகினால், பிரச்சனை தீர்ந்து விடும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

TNN 7 Sep 2017, 6:13 pm
சென்னை: முதலமைச்சர் பழனிச்சாமி பதவி விலகினால், பிரச்சனை தீர்ந்து விடும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil subramanian swamy asks palanisamy to resign
உன்னால எத்தனை பிரச்சனை; ராஜினாமா பண்ணுப்பா பழனிச்சாமி: சுப்பிரமணியன் சுவாமி!


தமிழகத்தை ஆளும் அதிமுகவிற்குள் பிளவு ஏற்பட்டு, ஆட்சி எப்போது கவிழும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

ஈபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தலைமையில் இரு அணிகளாக இயங்கி வருகின்றனர். இதற்கிடையில் முதலமைச்சர் பழனிச்சாமிக்கு தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.

இதையடுத்து ஆளுநர் அமைதி காத்து வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, அதிமுக பிளவு படாமல் இருக்கவும், திமுகவிற்கு ஆட்சியை கைப்பற்றாமல் இருக்கவும் முதலமைச்சர் பழனிச்சாமி பதவி விலக வேண்டும்.

முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்ற திட்டத்தில், ஆளுநர் என்ன செய்ய முடியும். டிடிவி தினகரனிடம் 21 எம்.எல்.ஏக்கள் இருப்பதால், தமிழக அரசுக்கு பெரும்பான்மை இல்லை.

தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு பாஜக எந்தவிதத்திலும் காரணமில்லை என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Subramaniyan Swamy asks Palanisamy to resign.

அடுத்த செய்தி