ஆப்நகரம்

2ஜி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக ஒரு வாரத்தில் மேல்முறையீடு செய்வேன்:சுப்பிரமணியன் சுவாமி

2ஜி வழக்கின் திர்ப்புக்கு எதிராக இன்னும் ஒரு வாரத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 4 Feb 2018, 3:18 pm
2ஜி வழக்கின் திர்ப்புக்கு எதிராக இன்னும் ஒரு வாரத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil subramanian swamy contest against 2g verdict with in a week
2ஜி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக ஒரு வாரத்தில் மேல்முறையீடு செய்வேன்:சுப்பிரமணியன் சுவாமி


2007ஆம் ஆண்டு முதல் இன்று வரை நாட்டின் மிகப்பெரிய ஊழலாகக் கருதப்படும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கை டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி விசாரித்து வந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை 2017ஆம் ஆண்டு தொடக்கத்தில் முடிவடைந்தது. இருப்பினும் தீர்ப்பு தேதி அறிவிப்பு தொடர்ந்து ஆறு முறை ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் வழக்கில் சமந்தபட்ட ஆர். ராசா, கனிமொழி உளிட்ட 14 பேரும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பு வழக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த தீர்ப்பு எதிராக ஒரு வாரத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக சுப்பிரமணையின் சுவாமி தெரிவித்துள்ளார். மேலும் இந்த மேல் முறையீட்டில் தாங்கள்தான் வெற்றிபெறுவோம் என்று தெரிவித்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்து , இறுதியில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி