ஆப்நகரம்

கொல்லிமலை வனபகுதியில் கொளுந்துவிட்டு எரியும் தீ: விவசாய பயிர்கள் நாசம்!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வனபகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், நூற்றுகணக்கான ஏக்கர் விவசாய பயிர்கள் தீயில் எரிந்து நாசமாகின.

Samayam Tamil 29 Mar 2019, 11:46 am
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வனபகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், நூற்றுகணக்கான ஏக்கர் விவசாய பயிர்கள் தீயில் எரிந்து நாசமாகின.
Samayam Tamil கொல்லிமலை வனபகுதியில் கொளுந்துவிட்டு எரியும் தீ: விவசாய பயிர்கள் நாசம்!
கொல்லிமலை வனபகுதியில் கொளுந்துவிட்டு எரியும் தீ: விவசாய பயிர்கள் நாசம்!


தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்தே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பருவமழையும் பொய்த்து போனதால் வனபகுதியில் இருக்கும் மரங்கள் பசுமையிழந்து காய்ந்து போய் காணப்படுகின்றன. இதனால் வனபகுதிகளில் அடிக்கடி தீ விபத்தும் ஏற்பட்டு வருகிறது.

இதனிடையே நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள கொல்லிமலை வனபகுதியில் மூங்கில் மரங்கள் ஒன்றொடொன்று உரசியதால் நேற்று திடீரென தீ பிடித்தது. காற்றும் பலமாக வீசியதால் தீ, அனைத்து பகுதிகளுக்கும் மளமளவென பரவியது.

இதன் காரணமாக காரவள்ளி, கீழ் செங்காடு, முட்டுக்காடு, நடுக்கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தென்னை, மா, வாழை, மஞ்சள், பாக்கு மரங்கள் தீயில் எரிந்து நாசமாகின. மேலும் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில் தீயை அணைக்க வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் கொல்லிமலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வனபகுதியில் தீவிபத்து ஏற்படாத வண்ணம், முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி