ஆப்நகரம்

ராஜ பக்சே-சு.சுவாமி சந்திப்பு: 7 பேர் விடுதலைக்கு தடையை ஏற்படுத்தும் சதி திட்டம்!

முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியின் சந்திப்பு, 7 பேர் விடுதலைக்கு தடையை ஏற்படுத்தும் சதி திட்டம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 11 Sep 2018, 2:12 pm
முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் சந்திப்பு, 7 பேர் விடுதலைக்கு தடையை ஏற்படுத்தும் சதி திட்டம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil Swamy_2
ராஜ பக்சே-சு.சுவாமி சந்திப்பு: 7 பேர் விடுதலைக்கு தடையை ஏற்படுத்தும் சதி திட்டம்!


பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை சென்று முன்னாள் அதிபர் ராஜபக்சேவை சந்தித்தார். அப்போது அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அவர் கூறியது தமிழக அரசியலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று திடீரென டெல்லி வந்த ராஜபக்சே, சுப்பிரமணிய சுவாமியை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7 பேர் விடுதலை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில், இவர்களின் சந்திப்பு ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட 7 பேர் விடுதலைக்கு தடையை ஏற்படுத்தும் சதி திட்டம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களை சுப்பிரமணிய சுவாமி, தொடர்ச்சியாக கூறி வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழர்களை பொறுக்கி என கூறினார். இந்நிலையில் முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவும், சுப்பிரமணிய சுவாமியும் சந்தித்தது அரசியல் வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி