ஆப்நகரம்

சென்னையில் சலசலப்பு, தீவிரமாகிறதா தென்மேற்கு பருவமழை..!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது...

Samayam Tamil 11 Aug 2020, 8:27 pm
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையின் காரணமாக கன்னியாகுமரி, தேனி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.
Samayam Tamil file pic


சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையயில் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நீலகிரி மாவட்டத்தின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

அதன் தொடர்ச்சியாக இன்று 7 மணி அளவில் சென்னை வேளச்சேரி, ஆதம்பாக்கம், பம்பல், அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அடுத்த செய்தி