ஆப்நகரம்

வருத்தத்தில் முழுநேர சாமியாரானார் சுதாகரன்

சிறையில் தனிமை எனும் கொடுமை வாட்டுவதால் முழுநேர சாமியாராக மாறிவருகிறார் சுதாகரன்.

TNN 19 Mar 2017, 7:47 pm
பெங்களூரு : சிறையில் தனிமை எனும் கொடுமை வாட்டுவதால் முழுநேர சாமியாராக மாறிவருகிறார் சுதாகரன்.
Samayam Tamil sudhakaran changed his getup like saint
வருத்தத்தில் முழுநேர சாமியாரானார் சுதாகரன்


சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசியோடு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் சசிகலாவின் அக்கா வனிதா மணியின் மகன் சுதாகரன். சிறையில் சசிகலாவும், இளவரசியும் ஒரே அறையில் உள்ளதால், ஒருவருக்கொருவர் உதவியாக இருகின்றனர்.

ஆனால் சுதாகரனோ ஆண்களுக்கான சிறை பகுதியில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரே சிறை என்றாலும், ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் நிலை இல்லாமல் உள்ளது.



அதிமுக கட்சி பொதுச்செயலாளர் என்ற முறையில் சசிகலாவை அவ்வப்போது சிலர் வந்து சந்தித்து செல்கின்றனர். ஆனால் இளவரசியையும், சுதாகரனையும் யாரும் சந்திக்க வருவதில்லையாம். அவ்வப்போது வருகைதந்து கொண்டிருந்த உறவினர்களின் வருகையும் தற்போது நின்று போய் உள்ளதால் இருவரும் மனம் நொந்து போய் உள்ளனராம்.



அதுமட்டுமல்லாமல் எப்போதும் திருநீர்,குங்குமம் என வைத்து பக்தி பழமாக இருந்த சுதாகரன், இப்போது அதை மேலும் அதிகரித்து, தாடி வளர்த்து கடவுளை பூஜை செய்து முழுநேர சாமியாராகவே மாறிவருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அடுத்த செய்தி