ஆப்நகரம்

சுஜித்தின் மாமாவும் கிணற்றில் விழுந்து இறந்தாராம்!!

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்த சுஜித்தின் மாமாவும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு அங்கிருந்த கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.

Samayam Tamil 30 Oct 2019, 4:11 pm
திருச்சி மணப்பாறை அருகே இருக்கும் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது சிறுவன் சுஜித் பரிதாமாக உயிரிழந்தான்.
Samayam Tamil Sujith mama


தமிழக அரசு சுஜித்தைக் காப்பாற்ற பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொண்டும், இறுதியில் சுஜித்தின் சடலத்தை மட்டுமே ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுத்தனர்.

இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி இருந்தது. இதற்கு முன்னதாக சுஜித்தின் மாமாவும் கிணற்றுக்குள் விழுந்து இறந்தது தற்போது தெரிய வந்துள்ளது.

சுஜித்தின் மாமா லியோ ஆரோக்கியதாஸ். வயது 43. ராணுவத்தில் பணியாற்றியவர். சுஜித்தின் வீட்டுக்குப் பின்புறம் கிணறு உள்ளது. இந்தக் கிணறு சுஜித் விழுந்து இறந்த ஆழதுளை கிணறு அருகே உள்ளது. 70 அடி ஆழமுள்ள இந்தக் கிணற்றில் தண்ணீர் இல்லை. இதில் லியோவின் குடும்பம் வளர்த்து வந்த கோழி ஒன்று விழுந்துள்ளது.

சுஜித்தின் மரணத்தை வைத்தும் அரசியல் செய்கிறார் ஸ்டாலின்... முதல்வர் குற்றச்சாட்டு

இதை எடுக்க லியோ கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கியுள்ளார். கோழியை எடுத்துக் கொண்டு மேலே வரும்போது கிணற்றுக்குள் விழுந்து இறந்துள்ளார்.

ஆழ்துளைக் கிணற்றை கடமைக்கு மூடிய அதிகாரிகள்.. கடுப்பான மக்கள்

இதுகுறித்து சுஜித்தின் தாய் மாமா ஜான் மரியா லூயிஸ் கூறுகையில், ''கிணற்றுக்குள் இருந்து வெளியே வரும்போது, 60 அடி ஆழத்தில் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். விழுந்தவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதில் அவர் இறந்தார். இதையடுத்து 2 மீட்டர் அகலமுள்ள கிணறு இரும்பு கிரில் கொண்டு மூடப்பட்டது'' என்றார்.
சுஜித் உடல் முழுமையாக மீட்கப்பட்டதா? ராதாகிருஷ்ணன் அளித்த பதில் என்ன தெரியுமா?

அடுத்த செய்தி