ஆப்நகரம்

இன்னும் 2 நாளுக்கு சூரியன் சுட்டெரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

இன்னும் இரண்டு நாட்களுக்கு வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Samayam Tamil 30 May 2018, 4:27 pm
இன்னும் இரண்டு நாட்களுக்கு வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Samayam Tamil 361406-heat-wave-again700-720x475


இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடகிழக்கு திசையில் நகர்ந்து மியான்மர் கடற்கரையை கடந்துள்ளது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து உள்ளது.

வரும் 2 நாட்களில் வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். சென்னையைப் பொறுத்தவரை இயல்பைவிட 3 டிகிரி அதிகம் வெயில் அடிக்கும்.

கடந்த 24 மணிநேரத்தில் திருத்தணியில் அதிகபட்சமாக 43.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சின்னகள்ளாறில் 5 செமீ மழையும், வால்பாறையில் 3 செமீ மழையும் பெய்துள்ளது." என்று அவர் கூறினார்.

அடுத்த செய்தி