ஆப்நகரம்

ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து? அமைச்சர் சொன்ன முக்கியத் தகவல்!

கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 23 Jan 2022, 11:10 am

ஹைலைட்ஸ்:

  • கொரோனா தொற்று குறைந்தால் வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது
  • தொற்றின் எண்ணிக்கையை பொறுத்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பற்றி முடிவுகள் எடுக்கப்படும்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 29,870இல் இருந்து 30,744ஆக உயர்ந்துள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. அதேசமயம், ஒமைக்ரானால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இம்மாத இறுதியில் தான் உச்சத்தை அடையும் என கூறப்படுகிறது. தற்போதே 30 ஆயிரம் பாதிப்புகள் என்றால் உச்சத்தை அடையும் போது எவ்வளவு பாதிப்புகள் பதிவாகும் என்ற அச்சம் நிலவுகிறது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் வருகிற 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த 2 ஞாயிற்றுக் கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில், இந்த வாரம் ஞாயிறன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியானது. ஆனால், வழக்கம் போல் இந்த வாரமும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

அதேசமயம், ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கிற்குத் தளர்வுகளை அறிவிக்க பல மாநில அரசுகள் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு லேசான பாதிப்பு மட்டுமே ஏற்படுத்துகிறது. பெரும்பாலானோருக்கு மருத்துவ உதவியும் பெரும்பாலும் தேவைப்படுவதில்லை. ஒரு வாரக் காலம் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டால் பாதிப்பு சரியாகிவிடுகிறது என்பதால் கட்டுப்பாடுகளை தளர்த்த அரசுகள் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
புதிய மின் இணைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி அசத்தல் தகவல்!
அதுமட்டுமல்லாமல் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்தும் போது கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா தொற்று குறைந்தால் வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது. கொரோனா தொற்றின் எண்ணிக்கையை பொறுத்து வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இருக்குமா என்று முடிவுகள் எடுக்கப்படும். வரும் வாரங்களில் கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்றார். மேலும் இந்தியாவில் பெருநகரங்களில் தொற்று எண்ணிக்கை குறைவது ஆறுதல் அளிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி