ஆப்நகரம்

ஆர்.எஸ்.எஸ் பேரணி வழக்கு: தமிழக அரசு சொன்ன காரணம் - விசாரணை ஒத்திவைப்பு!

ஆர்.எஸ்.எஸ் பேரணி வழக்கில் தமிழக அரசு பதில்தர அவகாசம் தந்து மார்ச் 27ஆம் தேதிக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 17 Mar 2023, 1:15 pm
ஆர்எஸ்எஸ் பேரணியை உள்ளரங்கு கூட்டமாக நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது.
Samayam Tamil Rss Procession


தமிழ்நாட்டில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் பேரணி நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடப்பரப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, 44 இடங்களில் உள்ளரங்க நிகழ்வாகவும், 6 இடங்களில் ஊர்வலமாகவும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை நடத்தி கொள்ளலாம் என அனுமதி அளித்தது.
​ஒப்பந்த ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்: நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்!இதனையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் தரப்பில் பொதுவெளியில் நடத்த அனுமதி அளிக்குமாறும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யுமாறும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தபோது, கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும் என்று தெரிவித்தது. பேரணிக்கு முழுமையாக தடை விதிக்கவில்லை என்றும் பிரச்சினைகள் உள்ள இடங்களில் தான் அனுமதி மறுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
வெயிலுக்கு லீவு விட்டாச்சு: ஐந்து நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (மார்ச் 17) விசாரணைக்கு வந்த போது 10 நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் பிரச்சனை இருந்ததால் ஆர்.எஸ்.எஸ்.வழக்கு பற்றி ஆலோசிக்க முடியவில்லை என்று தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில் இந்தவழக்கின் விசாரணையை 27ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி