ஆப்நகரம்

அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு: பொதுச் செயலாளர் எடப்பாடி - ஓபிஎஸ்ஸுக்கு கல்தா!

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 23 Feb 2023, 10:42 am
அதிமுக பொதிக்குழு வழக்கில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தீர்ப்பளித்தார்.
Samayam Tamil eps


ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் கூட்டப்பட்டது. அதில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்த பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகவும், இரு நீதிபதிகள் அமர்வு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்தது.

அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார். பல்வேறு கட்டங்களாக அதன் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தீர்ப்பு வழங்கினார்.

அதிமுக பொதுக்குழு வழக்கு: எடப்பாடி செம ஹேப்பி - என்னென்ன சாதகம்?

அதன்படி ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டதும் செல்லும் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி