ஆப்நகரம்

நீட் தேர்வில் உள் ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்

மருத்துவப் படிப்பில் 85 சதவீத ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணை ரத்துசெய்யப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

TNN 11 Aug 2017, 12:40 pm
சென்னை: மருத்துவப் படிப்பில் 85 சதவீத ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணை ரத்துசெய்யப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil supreme court dismisses tn governments plea on neet row
நீட் தேர்வில் உள் ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்


நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தமிழக அரசு மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 85 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் அரசாணை ஒன்றை பிறப்பித்தது. இதற்காக, அவரசச் சட்டத்தை நிறைவேற்றி ஓராண்டுக்கு தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வுக்கு விலக்கு கோரப்பட்டுள்ளது.

இச்சூழலில், கடந்த ஜூலை 31ஆம் தேதி நீர் தேர்வில் தமிழக அரசு பிறப்பித்துள்ள 85 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்துசெய்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு ஐந்தே நிமிடங்களில் தள்ளுபடி செய்யப்பட்டது. “கல்வியில் சமநிலை இருக்க வேண்டும். தமிழக அரசுக்கு மட்டும் தனிபாடத்திட்டதின் கீழ் தேர்வு நடத்துவது கல்வியில் பாகுபாடு ஏற்படுத்துவதாகக் கருதுகிறோம். நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றப்படும் நிலையில் தமிழகத்தில் மட்டும் விதிவிலக்கு கோருவது ஏன்?” என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அடுத்த செய்தி