ஆப்நகரம்

முல்லைப் பெரியாறு: 6 வாரங்களுக்குள் தீர்வுகாண உச்சநீதிமன்றம் உத்தரவு

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் வாகன நிறுத்தம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகள் 6 வாரங்களுக்குள் பேசி தீர்வுகாண உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

TNN 15 Sep 2017, 5:33 pm
தேனி: முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் வாகன நிறுத்தம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகள் 6 வாரங்களுக்குள் பேசி தீர்வுகாண வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil supreme court has order both kerala and tamilnadu
முல்லைப் பெரியாறு: 6 வாரங்களுக்குள் தீர்வுகாண உச்சநீதிமன்றம் உத்தரவு


முல்லை பெரியாறு நீர்ப்படிப்பு பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க கேரளா அரசு வாகன நிறுத்தம் அமைக்க முடிவு செய்திருந்தது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரண்டு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களும் இந்தப் பிரச்சனைக்கு 6 வாரங்களுக்குள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண உத்தரவிட்டது. மேலும், அதுபற்றிய தகவல்களை 27 ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

Supreme court has order both Kerala and Tamilnadu to solve the Mullai periyar issue within 6 weeks

அடுத்த செய்தி