ஆப்நகரம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது.

Samayam Tamil 2 Dec 2020, 9:15 pm

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க வேதாந்தா நிறுவனம் விடுத்திருந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
Samayam Tamil Sterlite


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்ததை தொடர்ந்து, வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

வேதாந்தா நிறுவனத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “இந்தியாவின் ஒட்டுமொத்த காப்பர் தேவையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு 36 விழுக்காடு பங்கு இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் நாம் ஏராளமாக காப்பர் இறக்குமதி செய்து வருகிறோம்.

புரேவி புயல் எச்சரிக்கை; தமிழக மீனவர்கள் கரை திரும்பி விட்டார்களா?

சோதனை அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதித்தால் இறக்குமதி வாயிலான வீணடிப்பை தவிர்க்க முடியும். ஆலையை 2 முதல் 3 மாதங்களுக்கு இயக்க அனுமதிப்பதே சிறந்த தீர்வு. சோதனை அடிப்படையில் ஆலையை இயக்குவதால் பொது நலனௌக்கு என்ன பாதிப்பு ஏற்படப்போகிறது” என்று வாதிட்டார்.

இதற்கு தமிழக அரசு தரப்பி வழக்கறிஞர்கள், “ஸ்டெர்லைட் ஆலையால் தொடர்ந்து மாசுப்பாடு அதிகரித்து வருகிறது. ஆலை மூடப்பட்டதால் நாட்டின் பணம் வீணாவதாக அவர்கள் கூறுகின்றனர். ஆலையால் குடிநீர் மாசுபடுத்தப்படுகிறது. மக்கள் புற்றுநோயாலும், மற்ற கொடிய நோய்களாலும் அவதிப்படுகின்றனர்” என வாதிட்டனர்.

இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு வேதாந்தா நிறுவனம் விடுத்திருந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி