ஆப்நகரம்

ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பீட்டா அமைப்பு மற்றும் விலங்குகள் நலவாரியம் தாக்கல் செய்த மனுவின் விசாரணையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தொிவித்துள்ளது.

TOI Contributor 12 Dec 2017, 4:43 pm
பீட்டா அமைப்பு மற்றும் விலங்குகள் நலவாரியம் தாக்கல் செய்த மனுவின் விசாரணையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தொிவித்துள்ளது.
Samayam Tamil supreme court refuses to impose interim prohibition on jallikadu
ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு


கடந்த ஆண்டு நடைபெற்ற மிகப்பொிய மாணவா் அறப்போராட்டத்தைத் தொடா்ந்து அரசியல் சாசன சட்டம் மாற்றியமைக்கப்பட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இது தொடா்பாக பீட்டா அமைப்பு மற்றும் விலங்குகள் நலவாரிம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போதைய விவாதத்தில், விலங்குகள் வதை தடை சட்டமானது இந்தியா முழுவதுமாக ஒரே வகையில் தான் பின்பற்றப்படுகிறது. அவ்வாறு இருக்கும் சமயத்தில் தமிழக அரசு கலாசாரம் என்ற பெயாில் அச்சட்டத்தை மாற்றி அமைக்க முடியுமா என்று விவாதிக்கப்பட்டது.

இந்த கேள்வி எழுப்பப்பட்டதைத் தொடா்ந்து மாநில அரசின் அதிகாரம் தொடா்பான விசயங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இதனை அரசியல் சாசன அமா்வுதான் விசாரிக்க வேண்டும் என்று தொிவித்த நீதிபதிகள், வழக்கு தொடா்பான அனைத்து மனுக்களையும் அரசியல் சாசன அமா்விற்கு மாற்றியமைப்பதாக தொிவித்தனா்.

மேலும், உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமா்வானது ஒரு மாத காலத்திற்குள் இந்த வழக்கை எடுத்துக்கொள்வது என்பது கடினமான ஒன்று. அதாவது அடுத்த ஜனவாி மாதத்திற்குள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது என்று கருதப்படுகிறது.

அதுமட்டுமின்றி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமானது ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க மறுப்பு தொிவித்துள்ளதாலும், வழக்கை அரசியல் சாசன அமா்வுதான் விசாரிக்க வேண்டும் என்று தொிவித்துள்ளதாலும், இந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதில் இடையூறு இருக்காது என்று கருதப்படுகிறது.

அடுத்த செய்தி