ஆப்நகரம்

நீட் தேர்வில் விலக்கு கிடையாது: மத்திய அரசு பல்டி

நீட் தேர்வுக்கு ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

TNN 22 Aug 2017, 3:46 pm
டெல்லி: நீட் தேர்வுக்கு ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil supreme court to announce important statement on neet row
நீட் தேர்வில் விலக்கு கிடையாது: மத்திய அரசு பல்டி


மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் தமிழகத்திற்கு மட்டும் ஒரு ஆண்டு விலக்கு கோரும் தமிழக அரசின் மனு மற்றும் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற சிபிஎஸ்சி மாணவர்களின் மனு ஆகியவற்றின் மீது உச்சநீதிமன்றம் இன்று முக்கியத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இன்றைய விசாரணையின் போது, எல்லா மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்ற பிறகு, ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு கோரும் தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கும் ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நீட் தேர்வின் அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும் வரும் செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை தமிழக அரசு கட்டாயமாக உடனே செயல்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு ஓராண்டுக்கு விலக்கு கோரி அவசரச் சட்டம் இயற்றினால் மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று கூறிய மத்திய அரசு இப்போது தலைகீழான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

பின்னணி:

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனிடையே, நீர் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்துசெய்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போது, மீண்டும் தமிழக அரசின் உள் ஒதுக்கீட்டு ஆணையை ரத்து செய்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று கோரி சிபிஎஸ்சி மாணவர்கள் தரப்பிலும் ஓராண்டு விலக்கு கோரி தமிழக அரசு தரப்பினும் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இன்று உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நாளை மறுநாள் தொடங்கும் மாணவர் சேர்க்கை :
நீட் தேர்வு அடிப்படையில் நாளை மறுநாள் மருத்துவ மாணவ சேர்க்கை நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அவசர சட்டத்துக்கு மத்திய அரசு அனுமதிக்கும் என எதிர்பார்த்த நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களுக்கு ஏமாற்றும் வகையில் இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் நாளை மறுநாள் மருத்துவ மாணவர்களின் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி