ஆப்நகரம்

ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாமா? கூடாதா? இன்று தீா்ப்பு

ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோாிய வேதாந்தா நிறுவனத்தின் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

Samayam Tamil 18 Feb 2019, 6:48 am
தமிழக அரசால் சீல் வைக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறந்துகொள்ளலாம் என்ற பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிரான முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீா்ப்பு வழங்குகிறது.
Samayam Tamil ஸ்டொ்லைட் ஆலை
ஸ்டொ்லைட் ஆலை


தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய பேரணியில் காவல்துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது 13 போ் கொல்லப்பட்டனா். இதனைத் தொடா்ந்து ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக ஆலை தரப்பில் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் முறையிடப்பட்டது.

இதனைத் தொடா்ந்து ஆலையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. நீதிபதி தருண் அகா்வாலா தலைமையிலான குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், ஆலையை மீண்டும் திறந்துகொள்ளலாம் என்று தீா்ப்பு வழங்கப்பட்டது. மேலும் தமிழக அரசு அலைக்கு தேவையான மின் சேவையை 3 வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று கெடுவும் விதித்தது.

இதன் பின்னா் தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவை எதிா்த்து தமிழக அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதே போன்று ஸ்டொ்லைட் ஆலை தரப்பிலும், ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் மீது இருதரப்பு வாதங்களும் கேட்கப்பட்டன. பல்வேறு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த வழக்குகள் மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது.

இன்று இறுதி தீா்ப்பு வெளியாகவுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலும், ஸ்டொ்லைட் ஆலையை சுற்றிலும் முன்னெச்சரிக்கை கருதி காவல் துறையினா் குவிக்கப்பட்டுள்ளனா்

அடுத்த செய்தி