ஆப்நகரம்

சூர்யா ஊர் ஊராக அலைவது ஏன்?

நடிகர் சூர்யா திடீரென தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சுற்றிவரப்போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

TNN 18 Jan 2017, 3:47 am
நடிகர் சூர்யா திடீரென தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சுற்றிவரப்போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil suriya to visit various parts of tamilnadu for the promotion of singam 3
சூர்யா ஊர் ஊராக அலைவது ஏன்?


நடிகர் சூர்யா நடிப்பில் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது. ஹரி இயக்கியுள்ள இப்படத்தில் அனுஷ்கா சூர்யாவின் ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும், ஸ்ருதி ஹாசன் மற்றொரு ஹீரோயினாக நடித்துள்ளார். புரோட்டா சூரி, ரோபோ சங்கர் ஆகியோரும் முக்கிய பாத்திரத்தில் வருகின்றனர்.

இப்படத்தின் ப்ரொமோஷன் வேலைக்காக நடிகர் சூர்யா தமிழ்நாடு முழுக்க கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல இடங்களுக்குப் சுற்றப்போகிறாராம். ஏற்கெனவே வெளியான சிங்கம் படத்தின் முதல் இரண்டு பாகங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளதால் மூன்றாம் பாகத்தில் வசூல் வேட்டை நடத்த இந்த முயற்சி நடக்கிறதாம்.

சிங்கம் 3 படத்தின் டீசர் இதுவரை ஒரு மில்லியன் பேருக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. அஜித், விஜய் ஆகியோருக்குப் பிறகு சூர்யாவின் படத்தின் டீசருக்குத்தான் இத்தனை பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

அடுத்த செய்தி