ஆப்நகரம்

காலையில் 1.65 லட்சம்; இப்போ 2.10 லட்சம்; மிரட்டும் காவிரி - மெர்சல் காட்டும் மேட்டூர் அணை!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, காலையில் இருந்ததை விட பிற்பகல் வேளைக்குள் தடாலடியாக அதிகரித்துள்ளது.

Samayam Tamil 12 Aug 2019, 11:58 am
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் அதிரடியாக உயர்ந்து கொண்டிருக்கிறது. அணைகளின் பாதுகாப்பு கருதி, அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Samayam Tamil Mettur Dam


இதனால் பிலிகுண்டுலு வழியாக, தமிழகத்திற்கு வரும் நீரும் மிகுதியாக காணப்படுகிறது. தற்போது ஒகேனக்கலில் 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

Also Read: மளமளவென உயரும் மேட்டூர் அணை- பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!

கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 1.65 லட்சம் கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 44.61 டி.எம்.சி ஆகும். மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 82.62 அடியாக உயர்ந்தது.

இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 2.10 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 85.43 அடியாக அதிகரித்துள்ளது. நேற்று 67 அடியாக இருந்த நிலையில், ஒரே நாளில் மேட்டூர் அணை 18 அடி உயர்ந்து ஆச்சரியம் அளித்துள்ளது.

Also Read: அடேங்கப்பா... இந்தளவு உயர்ந்த மேட்டூர் அணை; அதுவும் ஒரே நாளில் இப்படியொரு ஆச்சரியம்!

அணையில் நீர் இருப்பு 47.53 டிஎம்சி இருக்கிறது. நாளை மாலைக்குள் மேட்டூர் அணை 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நீர் திறப்பு அறிவிப்பால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிகப்படியான நீர் வருகை விவசாயத்திற்கு பெரிதும் உதவும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர்.

Also Read: பெருக்கெடுத்த வெள்ளம்; நீர்வரத்து கிடுகிடு உயர்வு- ஒகேனக்கலில் மிரட்டும் காவிரி!

அடுத்த செய்தி