ஆப்நகரம்

"மீண்டும் மீண்டுமா".. அண்ணாமலை பேசுறதை எல்லாம் நான் கேட்க மாட்டேன்.. மறுபடியும் சீண்டிய எஸ்.வி. சேகர்.. ஆஆ..

ஏற்கனவே அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வரும் எஸ்.வி. சேகர் தற்போது மீண்டும் அவர் கிண்டல் அடித்துள்ளார்.

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 2 May 2023, 12:29 pm
சென்னை: ஏற்கனவே பல்வேறு விவகாரங்களில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சீண்டி வரும் அக்கட்சி நிர்வாகி எஸ்.வி. சேகர், தற்போது மீண்டும் அதுபோன்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்.
Samayam Tamil sv shekar


அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற எஸ்.வி. சேகர் அங்கு தனக்கு ஏதேனும் பெரிய பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தார். ஆனால், அவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போன்ற பொறுப்புகள் அவருக்கு வழங்கப்படவில்லை. குறிப்பாக, தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து, எஸ்.வி. சேகர் போன்றோர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் தற்போது கட்சியின் மாநிலத் தலைமை மீது எஸ்.வி. சேகர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக அவரது பேச்சில் இருந்தே இது வெளிப்படுவதை பார்க்க முடிகிறது.

வாடகை + பெட்ரோல் + நண்பர்கள்.. அண்மையில் திமுகவினர் சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது வீட்டு வாடகை, வாகனத்துக்கு எரிபொருள் என அனைத்தையும் நண்பர்கள்தான் கொடுக்கிறார்கள்" எனக் கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பல மீம்ஸ்களும் வெளியாகின. திமுக நிர்வாகிகள் சிலர், "இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி அன்பளிப்புக்கும் வரி செலுத்த வேண்டுமே.. நண்பர்கள் கொடுத்த பணத்துக்கு அண்ணாமலை வரி செலுத்திகிறாரா.." எனக் கேட்டிருந்தனர்.

"மானஸ்தன்" - எஸ்வி சேகர் கிண்டல்: இந்நிலையில், இதை அடிப்படையாக வைத்து எஸ்.வி. சேகர் அண்ணாமலையை மறைமுகமாக குறிப்பிட்டு கடுமையாக கலாய்த்தார். 'ரத்த சம்மந்த உறவுகளை தவிர யார் பணமாக உதவி செய்தாலும் வருமான வரி கட்ட வேண்டும். ஏதாவது பழைய பொருள் வாங்கினால் ரூ.19 ஆயிரத்துக்கு மேல் பணமாக கொடுக்கக் கூடாது. RS.10 L x 12 = RS. 1.2 crores. இதுவே பெரிய ஊழலா இருக்கே.. IT தம்பி இது என்னன்னு விசாரி' என தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அடுத்த பதிவுதான் இன்னும் மோசம். அதில், "லட்ச ரூபாயில் அடுத்தவன் காசில் அமோகமாக வாழ்பவனை விட ஆயிரம் ரூபாய் சொந்த காசில் வாழ்பவனே மானஸ்தன். நேர்மையானவன். தலைமைக்கு தகுதியானவன். ஜெய்ஹிந்த்" எனக் குறிப்பிட்டிருந்தார் எஸ்.வி. சேகர்.

மீண்டும் வம்பு.. இதில் எங்குமே அவர் அண்ணாமலையின் பெயரை அவர் குறிப்பிடாத போதிலும், அவரை தான் கிண்டல் செய்கிறார் என்பது வெளிப்படையாக தெரிந்தது. இந்நிலையில், எஸ்.வி. சேகர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணாமலை குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தமிழகத்தில் பாஜகவின் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பதை கமலாலயத்தில்தான் நான் சொல்ல முடியும். ஒரே கட்சியில் இருக்கிறோம். ஒரே கட்சிக்காக உழைக்கிறோம். அதனால் அண்ணாமலை பற்றி எனக்கு ஒன்றும் இல்லை.
திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவல்? பகீர் இமெயில்.. முழு மலையையும் சுற்றி வளைத்த போலீஸார்.. என்னாச்சு?
அவர் சொல்லுறதை எல்லாம்.. நான் அவருக்கு விரோதமோ, எதிரியோ கிடையாது. என்னை பாஜக பயன்படுத்திக் கொண்டால், கட்சிக்கு நல்லது. இல்லையென்றால் எனக்கு நஷ்டம் கிடையாது. நான் யாரிடமும் பொதுவெளியில் சண்டை போடுவது கிடையாது. ஒத்து வரவில்லை என்றால் விலகிக் கொள்வேன். மேலும், அண்ணாமலை கூறுவதை எல்லாம் நான் படிக்கிறதே இல்லை. எனக்கு யார் மதிப்பு கொடுக்கிறார்களோ அவர்களுடன் தான் நான் இருப்பேன். அதிமுக கூட்டணிக் கட்சி தான். அவர்கள் அழைத்தால் கூட பிரச்சாரம் செய்வேன். இவ்வாறு எஸ்.வி. சேகர் கூறினார்.
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி