ஆப்நகரம்

எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் தற்கொலை விவகாரம்: குற்றப்பத்திரிகை தாக்கல்

கல்லூரி மாணவிகள் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

TNN 3 Apr 2017, 2:51 pm
விழுப்புரம்: கல்லூரி மாணவிகள் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
Samayam Tamil svs college students suicide case cbcid files chargesheet
எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் தற்கொலை விவகாரம்: குற்றப்பத்திரிகை தாக்கல்


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் பகுதியில் உள்ள எஸ்விஎஸ் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகிய 3 பேரும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம், அக் கல்லூரிக்கு எதிரே உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாணவிகள் சரண்யா, பிரியங்க, மோனிஷா மர்மமான முறையில் கிணற்றில் உயிரிழந்து கிடந்த வழக்கில் அக்கல்லூரி தாளாளர் வாசுகி உள்ளீட்ட 8 பேர் மீது , விழுப்புரம் முதன்மை குற்றவியல் நிதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். நீதிபதி சுபா முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட அந்த குற்றப்பத்திரிகையில், கல்லூரி நிர்வாகம் மாணவிகளை தற்கொலைக்கு தூண்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
SVS college students suicide case: CBCID files chargesheet

அடுத்த செய்தி