ஆப்நகரம்

தேவர் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை: சுவாமி தகவல்

நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று மரியாதை செலுத்தவுள்ளார்.

TNN 31 Oct 2016, 12:35 am
புதுதில்லி: நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று மரியாதை செலுத்தவுள்ளார்.
Samayam Tamil swamy likely to garland muthuramalinga thevars statue in parliament which he donated
தேவர் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை: சுவாமி தகவல்


ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உ.முத்துராமலிங்க தேவரின் 54-வது குருபூஜையும், 109-வது ஜெயந்தி விழாவும் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற அந்த விழாவில், முதல் நாள் ஆன்மிக விழாவாகவும், இரண்டாம் நாள் அரசியல் விழாவாகவும், மூன்றாம் நாள் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவாகவும் வழக்கம் போல் அனுசரிக்கப்பட்டது.

அதன்படி, மூன்று நாட்கள் விழா நேற்றுடன் நிறைவடைந்தது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர், நாடு முழுவதும் உள்ள தேவரின் சிலைக்கு ஆங்காங்கே மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று மரியாதை செலுத்தவுள்ளார். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

தீபாவளி விடுமுறை என்பதால் நாடாளுமன்றம் மூடப்பட்டுள்ளது. எனவே, திங்கள்கிழமையன்று (இன்று) தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப் போவதாக சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள காத்திருப்பு அறையில் (வெயிட்டிங் ஹால்) தேவருக்கு கடந்த 2002-ஆம் ஆண்டில் 9 அடி உயர சிலை வைக்கப்பட்டது. சிலையை அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் திறந்து வைத்தார் என்பதும், அந்த சிலையை சுப்பிரமணியன் சுவாமி நன்கொடையாக வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Swamy likely to garland Muthuramalinga Thevar's statue in parliament which he donated

அடுத்த செய்தி