ஆப்நகரம்

தோழர் விமர்சனம்: சைலேந்திர பாபு விளக்கம்

சமூக ஊடகங்களில் வைரலான தோழர் வதந்தி குறித்து இந்திய காவல் பணித்துறை அதிகாரி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார்.

TNN 25 Jan 2017, 5:32 pm
சென்னை: சமூக ஊடகங்களில் வைரலான தோழர் வதந்தி குறித்து இந்திய காவல் பணித்துறை அதிகாரி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார்.
Samayam Tamil sylendra babu ips explains about rumour spreading in social media about thozhar
தோழர் விமர்சனம்: சைலேந்திர பாபு விளக்கம்


கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் அமைதியாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள், கலவரத்தில் முடிவுக்கு வந்தது. அதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், சில சமூக விரோத அமைப்புகள் மாணவர் போராட்டத்தில் புகுந்து விட்டன. இணையதளங்களில் வெளியாகும் அனைத்து தகவல்களும் உண்மையானவை அல்ல. அவற்றின் நம்பத்தன்மையை இளைஞர்கள் ஆராய வேண்டும்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது ஏராளமானோர் புதிதாக நட்பாகியிருப்பார்கள். அதுபோன்ற நட்பு வட்டத்தில் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தோழர் என்று கூறி உங்களுக்கு அழைப்பு வந்தால் அதைத் துண்டித்து விடுங்கள். பெற்றோர்களும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. சில அமைப்பினர், அமல்ராஜுக்கு எதிராக வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர். அதேபோல், தோழர் குறித்த விஷயத்தை இந்திய காவல் பணித்துறை அதிகாரி சைலேந்திர பாபு பேசியதாக, அவருக்கு எதிரான விமர்சனங்களும் எழுந்தன.

இது ஒரு பொய்யான செய்தி.தோழர் என்ற வார்த்தையில் நான் எந்த கருத்தும் கூறவில்லை.தமிழ்வழி கல்வி பயின்ற எனக்கு அந்த வார்த்தையின் பொருள் தெரியும் — Sylendra Babu (@SylendraBabuIPS) January 25, 2017 இந்நிலையில், இது ஒரு பொய்யான செய்தி. தோழர் என்ற வார்த்தையில் நான் எந்த கருத்தும் கூறவில்லை. தமிழ்வழி கல்வி பயின்ற எனக்கு அந்த வார்த்தையின் பொருள் தெரியும் என சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார்.
Sylendra Babu IPS explains about rumour spreading in Social media about "Thozhar"

அடுத்த செய்தி