ஆப்நகரம்

நடிகையின் திருமணத்திற்கு நேரமுண்டு; கஜா புயலுக்கு இல்லையா? பிரதமரை தாக்கும் டி.ராஜேந்தர்!

மதுரை: கஜா புயல் பாதிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடியை, டி.ராஜேந்தர் தாக்கிப் பேசியுள்ளார்.

Samayam Tamil 26 Dec 2018, 9:46 pm
மதுரை விமான நிலையத்தில் லட்சிய திமுக தலைவர் டி.ஆர்.ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நாளை கீழக்கரையில் நடைபெறவுள்ள திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். ஸ்டாலின் என்னை கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு அழைக்கவில்லை. அதை நான் மறந்து விட்டேன்.
Samayam Tamil T Rajendar


அதை எனக்கு மறக்க தெரியும். இரட்டை இலையை வைத்து அரசியல் செய்கிறார்களா அல்லது இரட்டை இலையை இயக்குகிறீர்களா என்பது தெரியவில்லை. தட்டிக் கேட்க கூடியவர்கள் பயப்படுகிறார்கள். கஜா புயலினால் பல தென்னை மரங்கள் நாசமாகி போய்விட்டது. தஞ்சை மாவட்டம் டெல்டா மாவட்டம் சோற்றுக்கும், ரொட்டிக்கும் தற்போது சிரமப்படுகிறது.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் ஆகிய திட்டங்களை கொண்டு டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சிக்கிறது மத்திய அரசு. மத்திய அரசு ஏன் பாராமுகம் காட்டுகிறது. கஜா புயலுக்கு நிவாரணம் வழங்க ஏன் தமிழகத்தை புறக்கணித்து வருகிறீர்கள். பிரதமர் மோடி ஓட்டு கேட்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு வருகிறார். நடிகைகளின் திருமணத்திற்கு செல்லக் கூடிய பிரதமர், ஏன் தமிழகத்திற்கு வர மறுக்கிறீர்கள் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

அதிமுக தலைமை சரியில்லாமல் இருந்தும் எடப்பாடி அரசு இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. கஜா புயலுக்கு நிவாரண நிதியை மத்திய அரசிடம் கேட்டு வாங்க மறுக்கிறது எதிர்க்கட்சி. ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸோடு திமுக கூட்டணி வைத்ததாலே நான் திமுகவோடு கூட்டணி வைக்க வில்லை. இப்போது திமுகவும் காங்கிரசும் சேர்ந்துள்ள கூட்டு அது ஓட்டுக்காக சேர்த்துள்ளனர்.

தட்டிக் கேட்க வேண்டியவர்களும் சுட்டிக் காட்ட வேண்டியவர்களும் அமைதியாக இருப்பதாலே இது போன்ற எச்ஐவி இரத்தம் செலுத்தப்பட்டுள்ளது. மக்கள் போராடும் நிலையில் இல்லை போராடினால் அரசுக்கு புரியும். கமலஹாசன் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம். அரசியலுக்கு வராத ரஜினி பற்றி பதில் சொல்ல வேண்டியதில்லை என டி.ராஜேந்தர் கூறினார்.

அடுத்த செய்தி