ஆப்நகரம்

“போயஸ் தோட்டத்துல பூ பறிச்சிக்கிட்டு இருக்கீங்களா”? : அதிமுக மீது கடுப்பான டி.ஆர்!

“போயஸ் தோட்டத்துல பூ பறிச்சிக்கிட்டு இருக்கீங்களா”? : அதிமுக மீது கடுப்பான டி.ஆர்!

TOI Contributor 12 Jan 2017, 1:36 am
சென்னை : இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்று தமிழகமே ஒரே குரலில் போராடி வரும் நிலையில் அதிமுக தரப்பில் இது குறித்து எதுவும் பேசாமல் இருப்பது குறித்து நடிகர் டி.ராஜேந்தர் கடுமையாக சாடியுள்ளார்.
Samayam Tamil t rajendhar accuses admk mps on jallikattu issue
“போயஸ் தோட்டத்துல பூ பறிச்சிக்கிட்டு இருக்கீங்களா”? : அதிமுக மீது கடுப்பான டி.ஆர்!


செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், ஜல்லிக்கட்டி விவகாரத்தில் ஆளும் கட்சியான அதிமுக சார்பில் எவரும் வாய் திறக்காமல் இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதிமுக எம்பிக்கள் போயஸ் தோட்டத்தில் பூ பறித்து கொண்டு இருக்கிறார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். எம்பிக்கள் அனைவரும் தைரியத்துடன் கேள்வி கேட்க வேண்டு்ம் என்றும் கூறினார்.

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்றும், அதனை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் டி.ஆர் கூறினார். மேலும் மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழர்களின் பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை மதிக்கவில்லை என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

அடுத்த செய்தி