ஆப்நகரம்

ஈகோவை விடுங்க... மக்களைக் காப்பாத்துங்க: டி.டி.வி. தினகரன் கண்டனம்

மக்கள் வீடுகளிலிருந்தே சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்புக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 May 2020, 10:10 am
கொரோனா நோயாளிகள் இனி வீடுகளிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இனிமேலாவது ‘ஈகோ’ வை விட்டுவிட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil ttv dhinakaran


கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் குணமடைவோரின் எண்ணிக்கையை விட, பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நோயாளிகள் இனி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அப்படி தனிமைப்படுத்தும் போது உட்கொள்ள வேண்டிய மருந்துகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்து அம்மா மக்கள் முன்னேறக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.


மேலும் இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு திடீரென அறிவித்திருப்பது, ‘ஆட்சியாளர்கள் தங்களால் இனி எதுவும் செய்ய முடியாது என கைகளைத் தலைக்கு மேல் தூக்கிவிட்டார்களோ?’ என்ற பீதியை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.” என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி