ஆப்நகரம்

'மாட்டுக்கறி விற்கக் கூடாது' என மிரட்டிய தாசில்தார் பணியிடை மாற்றம்..!

அவினாசியில் மாட்டுக்கறி விற்கக் கூடாது என மிரட்டிய வட்டாட்சியர் தமிழ்செல்வன் ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்துக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 29 Jun 2021, 5:45 pm
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கசாப் கடை உரிமையாளரை மாட்டு கறி வெட்டக்கூடாது என்று தாசில்தார் தமிழ்செல்வன் மிரட்டும் வீடியோ காட்சி அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil twitter video image


தமிழகத்தில் மாட்டு கறி சாப்பிடவும், அறுத்து விற்பனை செய்யவும் தடை எதுவும் இல்லாத நிலையில் வட மாநிலங்களில் அரங்கேறும் சம்பத்தை போல தமிழகத்தில் அரசு அதிகாரி ஒருவர் மாடுகளை வதை செய்யக்கூடாது என்று கறிக்கடை உரிமையாளரை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வீடியோ பதிவு ட்விட்டரில் வைரலானதையடுத்து இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விசாரணைக்கு உத்தரவிட பட்டுள்ளது என்றும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.


ரேஷன் கார்டு சிறப்பு திட்டம்: ஜூலை 31க்குள் அமல்படுத்த உத்தரவு..!

தொடர்ந்து இச்சம்பவத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளப்பிய நிலையில், வட்டாட்சியர் தமிழ்செல்வன் ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்துக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையம் எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி