ஆப்நகரம்

தமிழக மீனவர்கள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு ஜெ., கடிதம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

TNN 4 Jun 2016, 7:08 pm
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil take action to release the 11 tn fishermen jayalalithaa letters pm modi
தமிழக மீனவர்கள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு ஜெ., கடிதம்


தமிழகத்தில் மீன்பிடிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த 45 நாள் தடைக்காலம் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 11 பேரை, இலங்கை கடற்படை கைது செய்தது.

அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை அரசு, மீனவர்களை சிறையில் அடைத்துள்ளது. இந்நிலையில், மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதினார்.

மேலும், இலங்கை அரசின் பிடியில் உள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 90 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க உத்தரவிடும்படியும் முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி