ஆப்நகரம்

தமிழ்நாட்டில் மாநகராட்சிகளாக மாறும் மூன்று நகராட்சிகள்: வெளியான தகவல்!

தமிழ்நாட்டில் மூன்று நகராட்சிகள் மாநகராட்சிகளாக மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 29 Jul 2021, 2:11 pm
திமுக தேர்தல் அறிக்கையில் புதிய நகராட்சிகள், மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Samayam Tamil tambaram


இது தொடர்பாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “திமுக தேர்தல் நேரத்தில் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி சில பகுதிகளில் உள்ள நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும். சில பகுதிகளில் உள்ள பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இது குறித்து தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார்" என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஆரம்ப பள்ளிகள் திறப்பு: கோர்ட் புதிய உத்தரவு!
மக்கள் தொகை பெருக்கம் காரணமாக பல நகரங்கள் விரிவடைந்து வரும் நிலையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 90களில் ஆறு மாநகராட்சிகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 15 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை மட்டும் பெருநகர மாநகராட்சி என்ற அந்தஸ்தில் உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் மேலும் மூன்று மாநகராட்சிகள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள நகரங்களும் வேகமாக வளர்கின்றன. இதனால் ஆவடி மாநகராட்சியாக 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தற்போது அமையவுள்ள மூன்று மாநகராட்சிகளும் சென்னைக்கு அருகிலேயே இருப்பதாக கூறுகிறார்கள்.
அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் முழு ஊரடங்கு அறிவிப்பு!
தாம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக மாற உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி